twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணமே செல்லாது! - உயர் நீதிமன்றம்

    By Shankar
    |

    சென்னை: நடிகர் பிரசாந்த் - கிரகலட்சுமிக்கு நடந்த திருமணம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    இருவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கிரகலட்சுமி ஏற்கனவே திருணமானவர் என தெரிய வந்ததும் 2007-ம் ஆண்டு பிரசாந்த் கிரகலட்சுமியை விட்டுப் பிரிந்தார். இந்த வழக்கு நீண்ட நாட்கள் நடந்தது.

    திருமணம் செல்லாது என அறிவிக்க 2009-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் பிரசாந்த் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லாது என தீர்ப்பு கூறினர்.

    அதைத் தொடர்ந்து தன்னை பிரசாந்துடன் இணைத்து வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் கிரகலட்சுமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுமீது இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    அதில் இருவர் திருமணமும் செல்லாது என குடும்ப நல நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நீதிபதி உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து கிரகலட்சுமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    English summary
    The Madras hight Court today announced that the marriage between actor Prashanth and Grihalakshmi was invalid. The court also dismissed the appeal petition of Grihlakshmi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X