ஜாமீனில் விடுதலையாக மறுத்த சீமான் - மேலும் 15 நாள் காவல்

By Staff

Seeman
புதுச்சேரி: ஜாமீனில் விடுதலையா இயக்குநர் சீமான் மறுத்து விட்டார். இதையடுத்து அவரது சிறைக் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர் சீமான் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி கொளஞ்சியப்பன் முன்பு அவர் ஆர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி, அவரிடம் ஜாமீன் கேட்டுள்ளீர்களா என்று கேட்டார். அதற்கு சீமான் அது பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து சீமானுக்கு வருகிற 2-ந் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பாளையங்கோட்டை போலீசார் தொடர்ந்த வழக்கிலும் சீமானுக்கு நேற்றுடன் காவல் முடிந்தது. இதையடுத்து சீமானை கடலூர் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் பாளையங்கோட்டை 1-வது மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு)ஹேமா விசாரணை நடத்தி அவரது காவலை மேலும் 15 நாட்களுக்கு (ஏப்ரல் 3-ந்தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த விசாரணை 40 நிமிடம் நடந்தது. பின்னர் அவர் மீண்டும் புதுச்சேரி ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X