Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'சொரிமுத்து ஐயனாரை கேலி செய்வதா!'-அவன் இவன் படத்தை எதிர்த்து வழக்கு!
சென்னை: அவன் இவன் படத்தில் சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த அவன் இவன் கடந்த வெள்ளியன்று வெளியானது.
இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனைப் பற்றியும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலைப் பற்றியும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை ஜமீனையும் தெய்வத்தையும் கிண்டலடிக்கும் விதத்தில் உள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி வற்புறுத்தினார்.
நெல்லை மாவட்டம் முழுவதும் பாலாவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சிங்கம்பட்டி ஜமீன் பெயரில் கேரக்டரை உருவாக்கி அவர் மது அருந்துவது போன்றும் நிர்வாணமாக ஓடவிட்டு அடிப்பது போலவும் காட்சிகள் வைத்திருப்பது அவதூறானது என்றும் ஜமீன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இக்குற்றச்சாட்டுகளை பாலா கண்டுகொள்ளவே இல்லை.
இதையடுத்து அவன் இவன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியின் தம்பி தாயப்பராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து சிங்கம் பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி கூறுகையில், "நான் ஆன்மீகத்தில் பற்று கொண்ட ஒரு துறவியாகி நீண்ட நாளாகிறது. எதைப் பற்றியும் கவலைப்படும் மனநிலையில் இல்லை. ஆனால் சிங்கம்பட்டி ஜமீனையும், காரையாறு கோவிலையும் களங்கப்படுத்தி இருப்பதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். மதுரையில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் ரத்த கையெழுத்திட்டு முதல்ல்வருக்கு மனு அனுப்ப உள்ளனர்.
அவன் இவன் படத்திற்கு தடை விதிக்க கோரி எனது தம்பி தாயப்ப ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனது மகன் ராஜாவும் வழக்கு தொடர உள்ளார்," என்றார்.
தென் மாவட்ட மக்களின் குல தெய்வமான சொரிமுத்து அய்யனாரை களங்கப்படுத்திய நடிகர் ஆர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.