Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடிகை குட்டி பத்மினியிடம் ரூ.12 லட்சம் மோசடி: கமிஷனரிடம் புகார்
பிரபல நடிகை குட்டி பத்மினி சிறு வயதில் இருந்தே நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிப்பை நிறுத்தி வி்ட்டு தன் கணவர் பிரபு நேபாலுடன் சேர்ந்து டி.வி. சீரியல்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகரில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அங்கு தான் அவரது அலுவலகமும் உள்ளது. நேற்று காலை 11 மணியளவில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகை குட்டி பத்மினி துணை கமிஷனர் ஆசியம்மாளிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
என் அலுவலகத்தில் பணிபுரிந்த சமீரா என்ற பெண் உள்பட 3 பேர் சேர்ந்து எனக்கு தெரியாமல் ரூ.12 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இது மட்டுமின்றி என் அலுவலகத்தில் இருந்து நிறைய பைல்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது அவர்கள் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
சமீரா எனக்கு அனுப்பிய இ-மெயிலில், நான் பணத்தை கேட்டு போலீசில் புகார் கொடுத்தால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியள்ளார். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை வாங்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் பேரில் தக்க நடவடிக்கை எடுக்குமாறு நுங்கம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.