Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
குஷ்பு வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு!
பாமக, விசி மேடைகளில் நின்று ராமதாஸைப் புகழ்ந்தும், திருமாவளவனைப் பாராட்டியும் குஷ்பு பேசி வருகிறார், அவர்கள் கட்சிகளுக்காக ஓட்டுக் கேட்டு பிரச்சாரமும் செய்துவிட்டார்.
ஆனாலும் இந்த கற்பு விவகாரத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு மட்டும் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது.
தமிழ் பெண்களின் கற்பு குறித்து, ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, பேட்டியில் தமிழ் பெண்களை இழிவுபடுத்தியதாக, பா.ம.க., சேலம் மேற்கு மாவட்ட வக்கீல் அணி செயலர் முருகன், 2005ல், சேலம் மாவட்டம், மேட்டூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்ரீதர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக குஷ்புவுக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகாத குஷ்புவுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால், 2005 நவம்பர் 16ல் நேரில் ஆஜரான குஷ்பு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய குஷ்பு கார் மீது பா.ம.க.,வினர் முட்டை வீசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குஷ்பு தொடர்பான இந்த வழக்கு, மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நேற்று விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட் பகவதியம்மாள், வழக்கை மே 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.