Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எம்ஜிஆர் மேக்கப்மேன் பீதாம்பரம் மரணம்!
கேரளாவைச் சேர்ந்தவர் பீதாம்பரம். வாகினி ஸ்டுடியோவில் உதவி மேக்கப்மேனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். என் டி ராமாராவுக்கு மேக்கப் போடும் வாய்ப்பு கிடைத்தது. அவரது புகழ்பெற்ற கிருஷ்ணர் வேடத்தைப் போட்டுவிட்டவர் பீதாம்பரம்தான். இந்தி நடிகர் அசோக்குமார், தமிழில் ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கும் மேக்கப் போட்டவர் இவர்.
ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆரைச் சந்தித்தபின் அவரது நிரந்தர மேக்கப்மேனாகிவிட்டார்.
இயக்குநர் பீ வாசு, அவரது இரண்டாவது மகன். ரஜினியுடன் வாசு மிகவும் நெருக்கமாக மாற காரணமாக அமைந்தவர் பீதாம்பரம்தான்.
முரட்டுக்காளையில் ரஜினி ஒரு காட்சியில் கிருஷ்ணராக காட்சி அளிக்க வேண்டும். அந்தக் காட்சிக்கு மேக்கப் போட வந்தார் பீதாம்பரம். உடன் வாசுவும் வந்தார். அப்போது தொடங்கியது ரஜினி - வாசு நட்பு.
பீதாம்பரத்தின் மூத்த மகன் பெயர் வித்யாசாகர். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க விநியோகஸ்தர். சந்திரமுகி படத்தை விநியோகித்தவர் இவர்தான்.
பீதாம்பரம் மறைவுக்கு தமிழ்த் திரையுகலகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.