Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மும்பை டி.வி.நடிகை கைது!
மும்பை: தன்னிடம் வீட்டு வேலை செய்த 10 வயது சிறுமிக்கு சூடு போட்டுக் கொடுமைப்படுத்திய மும்பை டிவி நடிகை ஊர்வசி கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் அமராவதி என்ற இடத்திலிருந்த அந்த ஏழைச் சிறுமியை, மும்பையில் படிக்க வைக்கிறேன் என்று அவளது பெற்றோரிடம் சொல்லி நடிகை ஊர்வசி தனோர்க்கர் மும்பை அழைத்து வந்துள்ளார். ஆனால் சொன்னதுபோல் படிக்க வைக்காமல் தன் வீட்டில் வேலைக்காரியாக வைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
சிறுமியின் முகம், கை, கால் மற்றும் பல பாகங்களில் சூடு போட்டுள்ளார் அந்த நடிகை. ஆனால் வெளியில் தெரியாதவாறு அந்தச் சிறுமையை அடைத்தே வைத்திருந்தாராம்.
ஒரு வாரம் கழித்து திடீரென அந்தச் சிறுமி வெளியில் வந்தபோது, அவள் இருந்த மோசமான கோலத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு புகார் செய்துள்ளனர்.
உடனடியாக விரைந்துவந்த மும்பை போலீசார் நடிகையைக் கைது செய்தனர். அவர் மீது சிறுமியை வேலைக்கு வைத்திருந்தது, சிறுவர் மீதான குற்றம் புரிந்தது போன்ற பிரிவுகளின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.