twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்காக அண்ணன் சத்யநாராயணா ராவ் 3 நாட்கள் தொடர் பூஜைகள்

    By Shankar
    |

    Rajini with Sathyanarayana
    பெங்களூரு: சிகிச்சை முடிந்து, சிங்கப்பூரில் ஓய்விலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நலமுடன் திரும்பி வரவும், புதிய வேகத்துடன் கலைத் துறையில் சாதனை படைக்கவும் அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கெயக்வாட் பெங்களூர் கோயிலில் தொடர்ந்து 3 நாட்கள் சிறப்புப் பூஜை மற்றும் யாகம் நடத்தினார்.

    பெங்களூர் கோவிபுரத்தில் உள்ள அம்பா பாவனி கோயிலில் காலை 8.30 மணிக்கு பூஜை தொடங்கியது. பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. பின்னர் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திங்கள்கிழமை தொடங்கிய இந்த பூஜைகள் இன்று வரை 3 நாட்கள் நடந்தன. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.

    இது பற்றி சத்யநாராயணா கூறுகையில், "மருத்துவமனையிலிருந்து தம்பி ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். அவருக்காக ரசிகர்கள் செய்த பிரார்த்தனைக்கு ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

    விரைவில் ராணா ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு நடிப்பார். அதற்கு ஏற்ற வகையில் அவர் முழுமையான உடல் நலம் பெற வேண்டி இங்கு சிறப்பு பூஜை, பிரார்த்தனை செய்தோம்," என்றார்.

    English summary
    Sathyanarayana Rao, elder brother of Rajini performed special poojas for 3 days continuously for the speedy recovery of superstar brother Rajinikanth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X