Don't Miss!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வசனகர்த்தா பிரசன்னகுமார் மரணம்
திரைப்பட வசனகர்த்தா என்.பிரசன்ன குமார் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 49. கணையத்தில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக அவர் நீண்டநாட்களாக அவதிப்பட்டு வந்தார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார், கல்லூரி நாட்களிலிருந்தே சினிமா, நாடகம் என ஆர்வத்துடன் இருந்தவர். யாரிடமும் உதவியாளராக இல்லாமல் நேரடியாகவே திரைப்படத்துறைக்கு வந்த இவர் இதுவரை 100 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ளார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, யூத் போன்ற பல ஹிட் படங்களில் இவரது பங்களிப்பும் இருந்தது.
நடிகர் தியாகு இவரது நெருங்கிய நண்பர். தியாகுதான் இவரை இயக்குநர்கள் ராபர்ட்-ராஜசேகரனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் விளைவு பாலைவனச்சோலை திரைப்படத்தில் முதன்முதலாக வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது பிரசன்னகுமாருக்கு. இவர் கடைசியாக வசனம் எழுதிய படம் இன்று வெளியாகும் 'சண்ட'.
விவேக்கின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். விவேக் நடித்த தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மநாபன் போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் இவர்தான் நகைச்சுவைப் பகுதியை எழுதினார். கிட்டத்தட்ட விவேக்கின் ஆஸ்தான வசனகர்த்தாவாகவும் விளங்கி வந்தார்.
அதேபோல இயக்குநர் லிங்குச்சாமியின் ஆஸ்தான வசனகர்த்தாவாகவும் விளங்கினார். அவரது அனைத்துப் படங்களிலும் பிரசன்னாதான் வசனம் எழுதியுள்ளார்.
மாநில அரசின் விருதினையும் பெற்றுள்ளார் பிரசன்ன குமார்.
25 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வந்த பிரசன்னகுமாருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
இறுதிச் சடங்குகள் இன்று கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் நடக்கின்றன.
-
அவர்களைவிடவும் விஜய்தான் பெஸ்ட்.. தனியாக தெரியும் குதிரை.. புகழ்ந்து தள்ளிய பிரசாந்த் பட இயக்குநர்
-
மகளா, கௌரவமா?.. திணறிய ரஜினி?.. சி.எம் வீட்டுக்கு போகச்சொன்னாரா குருநாதர்?.. பிரபலம் இப்படி சொல்றாரே?
-
ஓட்டுப்போட வராத ஜோதிகா.. மும்பை போனதும் மொத்தமா மாறிவிட்டார்.. விளாசும் நெட்டிசன்ஸ்!