Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வசனகர்த்தா பிரசன்னகுமார் மரணம்
திரைப்பட வசனகர்த்தா என்.பிரசன்ன குமார் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 49. கணையத்தில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக அவர் நீண்டநாட்களாக அவதிப்பட்டு வந்தார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார், கல்லூரி நாட்களிலிருந்தே சினிமா, நாடகம் என ஆர்வத்துடன் இருந்தவர். யாரிடமும் உதவியாளராக இல்லாமல் நேரடியாகவே திரைப்படத்துறைக்கு வந்த இவர் இதுவரை 100 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ளார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, யூத் போன்ற பல ஹிட் படங்களில் இவரது பங்களிப்பும் இருந்தது.
நடிகர் தியாகு இவரது நெருங்கிய நண்பர். தியாகுதான் இவரை இயக்குநர்கள் ராபர்ட்-ராஜசேகரனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் விளைவு பாலைவனச்சோலை திரைப்படத்தில் முதன்முதலாக வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது பிரசன்னகுமாருக்கு. இவர் கடைசியாக வசனம் எழுதிய படம் இன்று வெளியாகும் 'சண்ட'.
விவேக்கின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். விவேக் நடித்த தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மநாபன் போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் இவர்தான் நகைச்சுவைப் பகுதியை எழுதினார். கிட்டத்தட்ட விவேக்கின் ஆஸ்தான வசனகர்த்தாவாகவும் விளங்கி வந்தார்.
அதேபோல இயக்குநர் லிங்குச்சாமியின் ஆஸ்தான வசனகர்த்தாவாகவும் விளங்கினார். அவரது அனைத்துப் படங்களிலும் பிரசன்னாதான் வசனம் எழுதியுள்ளார்.
மாநில அரசின் விருதினையும் பெற்றுள்ளார் பிரசன்ன குமார்.
25 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வந்த பிரசன்னகுமாருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
இறுதிச் சடங்குகள் இன்று கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் நடக்கின்றன.