Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சால்வை போட முயன்ற தொண்டருக்கு பளார் விட்ட பாலகிருஷ்ணா!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமாராவின் மகன்.
தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவராகவும் திகழ்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள 'சிம்மா' படம் வசூலில் கலக்கி வருகிறது. இந்த வெற்றியையடுத்து, பாலகிருஷ்ணா கோயில் கோயிலாகப் போய் நேர்த்திக் கடன் செலுத்தி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக நேற்று காளஹஸ்தி கோயிலுக்கு வந்திருந்தார் பாலகிருஷ்ணா. அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் தெலுங்குதேசம் கட்சியினர்.
அவர் கோயிலுக்குள் நுழைய முயன்றபோது, ஒரு தொண்டர் ஆர்வம் மிகுதியில் அவருக்கு சால்வை அணிவிக்க முயல, அவரது கன்னத்தில் பளாரென்று அறை விட்டார் பாலகிருஷ்ணா. இதில் அதிர்ச்சியடைந்துவிட்டனர் தொண்டர்கள்.
பின்னர் கோயிலுக்குள் நுழைந்த பாலகிருஷ்ணாவுக்கு மீண்டும் சால்வை அணிவிக்க முயன்றார் வேறொரு தொண்டர். அவருக்கும் இதே போன்று பளார் பரிசு கிடைக்க, தொடர்ந்து அவரை விட்டு தள்ளியே நின்றனர் தொண்டர்கள்.