Don't Miss!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சினிமாக்காரர்களுக்கு பையனூரில் 75 ஏக்கர் நிலம்!
சென்னைக்குப் பக்கத்தில் ஒரு சென்ட் நிலம் வாங்கக் கூட வக்கற்றுப் போய் மக்கள் புலம்பிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு சென்னையை அடுத்த பையனூர் அருகே 75 ஏக்கர் நிலத்தை ஓசியில் (ஒப்புக்கு ஒரு தொகையை நிர்ணயித்துள்ளார்கள்) கொடுக்கிறார் முதல்வர் கருணாநிதி. இதற்கான அறிவிப்பை அமைச்சரவைக் கூட்ட முடிவில் வெளியிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் எடுத்துள்ள முடிவின்படி, சினிமாக்காரர்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டம், பையனூர் கிராமத்தில் 75 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது அரசு.
இதில் நடிகர், நடிகைகள் மற்றும் பெப்சி உறுப்பினர்கள் 50 ஏக்கரில் வீடு கட்டிக் கொள்வார்களாம். இன்னொரு 15 ஏக்கர் அவர்களின் பொதுவான பயன்பாட்டுக்காம்.
இந்த நிலத்துக்கு குத்தகையாக ஆண்டுக்கு ரூ.1.000 மட்டும் செலுத்தினால் போதுமாம். அதுவும் 99 ஆண்டுகளுக்கு குத்தகையாம் (நடுவில் யாராவது ஒரு தலைவரின் பிறந்த நாளன்று தள்ளுபடி செய்துவிட்டால் போயிற்று!). இந்த இடத்தை சினிமாக்காரர்களின் பிரதிநிதிகளே நேரில் போய் ஆ.....ய்வு நடத்தி தேர்வு செய்து முதல்வருக்குச் சொன்னார்களாம்.
இதைவிட முக்கியம், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தந்துள்ளார் முதல்வர் கருணாநிதி. நிலத்தின் வழிகாட்டு மதிப்பில் 3.5 சதவிகிதம் மட்டும் இதற்கு ஆண்டு குத்தகையாக அந்த 'ஏழைகளிடம்' பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது அமைச்சரவை.
இந்த நிலம் தவிர மேலும் 41 ஏக்கர் நிலப்பரப்பை தேடி வருகிறாராம் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன். இந்த இடமும் ஒரே பரப்பாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என விருப்பம் தெரிவித்தாராம். எனவே கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலையை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் நிலம் தேடி வருகிறார்களாம்.
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
2வது திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ்.. சித்தார்த்துடன் தெலங்கானா கோயிலில் ரகசிய கல்யாணம்?