Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொலை மிரட்டல் வழக்கில் வனிதாவுக்கு முன்ஜாமீன்!
நடிகை வனிதாவுக்கும், முன்னாள் கணவர் ஆகாசுக்கும் இடையே மகன் விஜய் ஸ்ரீஹரியை யாரிடம் வைத்திருப்பது என்று தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 18-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்காக வனிதா நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது நீதிமன்றத்துக்கு வெளியே ஆகாஷ் வக்கீல் சசிகுமாரை வனிதா தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வக்கீல் சசிகுமார் சென்னை உயர்நீதிமன்ற போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக வனிதா, அவரது 2-வது கணவர் ஆனந்தராஜன், ஜாகீர்உசேன் ஆகிய 3 பேர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் வழக்கில் வனிதா உள்பட 3 பேரும் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. வனிதாவுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வக்கீல் சசிகுமார் எதிர்ப்பு தெரிவித்து பதில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.