Don't Miss!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கணவர் பல கோடி மோசடி-விஜயநகர மன்னர் வாரிசு போலீசில் புகார்!
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் போட்கிளப் ரோடு பகுதியை சேர்ந்தவர் வித்யா சிங் (வயது 57). இவர் நேற்று தனது மகளுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "நான் ஆந்திர மாநிலம் விஜயநகரைச் சேர்ந்தவள். விஜயநகர மன்னர் பரம்பரையில் பிறந்த நான், சென்னையில்தான் படித்து வளர்ந்தேன். 83-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது.
எனது கணவர் 12-பி, லேசாலேசா ஆகிய தமிழ் படங்களைத் தயாரித்தார். தற்போது அச்சம் தவிர் என்ற படத்தையும் எடுத்து வந்தார். அந்த படம் பாதியில் நிற்கிறது. அவர் படம் தயாரிப்பதற்காக எனது தங்க,வைர நகைகள் மற்றும் சொத்துக்களை விற்றுப் பணம் கொடுத்தேன். அந்த வகையில் பல கோடி பணத்தை அவர் என்னிடம் இருந்து வாங்கினார்.
இந்த நிலையில் எனது கணவரை திடீரென்று காணவில்லை. அவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு, வாழ்வதாக அறிகிறேன். அவர் மீது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளேன்.
எனது சொத்துக்களை அபகரித்துக் கொண்டு, தற்போது வேறொரு பெண்ணுடன் வாழும் எனது கணவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன்..", என்றார்.
இந்த புகார் மனு மீது தேனாம்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.