Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினி நலம்பெற 500 இயக்குநர்கள், 1000 உதவி இயக்குநர்கள் கூட்டுப் பிரார்த்தனை!
கமலா திரையரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, எழில், பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், சேரன், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார், ஈ.ராமதாஸ், சீனு ராமசாமி, வெற்றி மாறன், ஏ. ஜெகந்நாதன், டி.கே.சண்முக சுந்தரம், சசிமோகன் உள்பட 500 இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்களும், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
தமிழ்த் தாய் வாழ்த்து முடிந்ததும், இயக்குநர்கள், சங்க பொது செயலாளர் ஆர்.கே.செல்வமணி, எழுந்து பேசினார். "நமது கலைகுடும்பத்தின் மூத்த சகோதரர் அன்பிற்கினியவன், மனிதருள் பெருமைக்குரியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் உடல் நலம் பெற்று உடன் வீடு திரும்ப நாம் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்," என்று அறிவித்தார்.
உடன் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.
தமிழ் திரையுலகில் குறிப்பாக இயக்குநர்கள் சார்பில் இதுபோன்ற பிரார்த்தனை நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறை.