twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி நலம்பெற 500 இயக்குநர்கள், 1000 உதவி இயக்குநர்கள் கூட்டுப் பிரார்த்தனை!

    By Shankar
    |

    Rajinikanth
    சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று வரவேண்டி இயக்குநர் பாரதிராஜா தலைமையில் 500 இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்களும் இன்று சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.

    கமலா திரையரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, எழில், பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், சேரன், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார், ஈ.ராமதாஸ், சீனு ராமசாமி, வெற்றி மாறன், ஏ. ஜெகந்நாதன், டி.கே.சண்முக சுந்தரம், சசிமோகன் உள்பட 500 இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்களும், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

    தமிழ்த் தாய் வாழ்த்து முடிந்ததும், இயக்குநர்கள், சங்க பொது செயலாளர் ஆர்.கே.செல்வமணி, எழுந்து பேசினார். "நமது கலைகுடும்பத்தின் மூத்த சகோதரர் அன்பிற்கினியவன், மனிதருள் பெருமைக்குரியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் உடல் நலம் பெற்று உடன் வீடு திரும்ப நாம் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்," என்று அறிவித்தார்.

    உடன் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.

    தமிழ் திரையுலகில் குறிப்பாக இயக்குநர்கள் சார்பில் இதுபோன்ற பிரார்த்தனை நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறை.

    English summary
    Morethan 500 directors and 1000 assistant directors performed a joint prayer for superstar Rajinikanth at Kamala theater on Monday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X