Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காதலனை போராடி மணந்த துணை நடிகை பூஜா!
இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார் பூஜா.
சென்னையை அடுத்த போரூர் காரம்பாக்கம், பொன்னி நகரை சேர்ந்தவர் பூஜா (வயது 24). சினிமா துணை நடிகையான இவர், சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் ஒரு படப்பிடிப்புக்காகச் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் செய்திருந்தார் பூஜாவின் தாயார்.
வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஜெகன் என்ற ஆட்டோ டிரைவரை பூஜா காதலித்ததாகவும், அவரோடு படப்பிடிப்பில் இருந்து சென்று விட்டதாகவும் தெரிய வந்தது.
இச்செய்தி பரவியதும் ஜெகன் மட்டும் வளசரவாக்கம் போலீசில் சரண் அடைந்தார். பூஜாவுடன் ஜாலியாக இருக்க புதுக்கோட்டைக்குச் சென்றதாகவும், இனி பிரிந்துவிடுவதாகவும் போலீசாரிடம் ஜெகன் தெரிவித்தார்.
பூஜாவை புதுக்கோட்டையில் இருந்து போலீசார் சென்னை அழைத்து வந்தனர். அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர் போலீசார்.
காதலன் ஏற்றுக்கொள்ளாததால் பூஜா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். காதலன் ஏற்றுக்கொள்ளும் வரை நான் தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
திடீர் திருமணம்!
இதற்கிடையில் நேற்று காலையில் பூஜா தனது காதலன் ஜெகனோடு பெரியபாளையம் கோவிலுக்கு சென்றார். அங்கு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஆரணியில் உள்ள பதிவு அலுவலகத்தில் முறைப்படி திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
நேற்று இரவு பூஜா தனது காதல் கணவரோடு எழும்பூர் கோர்ட்டுக்கு வந்தார். அங்கு தனது வழக்கறிஞர் ஞானத்தை சந்தித்து பேசினார்.
காதலனை திருமணம் செய்து கொண்ட விஷயம் முறைப்படி போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. "ஏழு ஆண்டுகள் காதலித்தோம். இப்போதுதான் கைகூடி இருக்கிறது. பெரும்போராட்டத்துக்குப் பிறகே ஜெகனைக் கைப்பிடித்தேன். இன்றுதான் எனக்கு முழுமையான வாழ்க்கை கிடைத்துள்ளது. இந்த வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார் பூஜா.