Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'!
ஆனால் சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள், முக்கிய தயாரிப்பாளர்கள் என யாரும் இதில் பங்கேற்கவில்லை.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் இன்று காலை தொடங்கியது. அங்கு சாமியானா பந்தல் போடப்பட்டு, அதில் அன்னா ஹசாரே உருவப்பட பேனர் கட்டி இருந்தனர்.
காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கியது.
நடிகர்கள் சூர்யா, பிரபுதேவா, தியாகு, நடிகை ரோகினி, இயக்குனர்கள் சேரன், மனோபாலா, தயாரிப்பாளர்கள் கே.ஆர்., சித்ராலட்சுமணன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தும் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும் பேசினர்.
பின்னர் மாலை 5.30 மணிக்கு உண்ணாவிரதம் முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த சிலரும் கூட முழுவதுமாக இல்லாமல், தலையைக் காட்டிவிட்டுப் போவதிலேயே குறியாக இருந்தனர்.