முல்லைப் பெரியாறுக்காக காலிக் குடங்களுடன் சென்னையில் மறியல்-பாரதிராஜா அழைப்பு

இதுகுறித்து அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நீதி கேட்டு மே 17 இயக்கம் சார்பில் டிசம்பர் 25ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மாலையில் கண்ணகி சிலை முன்பு இப்போராட்டம் நடைபெறும். இதில் காலிக் குடங்களுடன் தமிழர்கள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன்.
அதேபோல கம்பம் மற்றும் தேனியில் டிசம்பர் 30ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.


Click it and Unblock the Notifications











