twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முல்லைப் பெரியாறுக்காக காலிக் குடங்களுடன் சென்னையில் மறியல்-பாரதிராஜா அழைப்பு

    By Sudha
    |

    Bharathiraja
    சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நீதி கோரி சென்னையில் வருகிற 25ம் தேதி மாலை காலிக் குடங்களுடன் கண்ணகி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நீதி கேட்டு மே 17 இயக்கம் சார்பில் டிசம்பர் 25ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் மாலையில் கண்ணகி சிலை முன்பு இப்போராட்டம் நடைபெறும். இதில் காலிக் குடங்களுடன் தமிழர்கள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன்.

    அதேபோல கம்பம் மற்றும் தேனியில் டிசம்பர் 30ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.

    English summary
    May 17 movement will protest against Kerala in Mullaiperiyar issue in Chennai on Dec 25. Director Bharathiraja has called all Tamils to attend the protest enmasse. Likewise, TN Film directors will sit in a fast on the same issue in Cumbum and Theni on Dec 30.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X