Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிரஞ்சீவி பற்றி அவதூறு.. அடித்து நொறுக்கப்பட்ட டிவி அலுவலகம்!
அந்த சேனலின் ஹைதராபாத் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
தனியார் தெலுங்கு டி.வி. சேனல் ஒன்று நேற்று அரசியல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது.
அதில் பேசிய கட்சி பிரமுகர்கள் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும், இனி சிரஞ்சீவியால் தொடர்ந்து கட்சியை நடத்த முடியாது என்றும் பேசினார்கள்.
இதை கேட்டதும் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்த டி.வி. அலுவலகத்திற்கு முன் திரண்டனர். சிறிது நேரத்தில் டி.வி. அலுவலக கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினார்கள்.
சேனல் ஊழியர் சசிகாந்த் என்பவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தடியடிப் பிரயோகத்தைத் தொடங்கினர். உடனே தொண்டர்கள் தப்பி ஓடினர்.
இதுபற்றி ஜூபிளி ஹில்ஸ் போலீசார் 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓட முயன்றவர்களில் 15 பேரைக் கைது செய்தனர் ஹைதராபாத் போலீசார்.
மேலும் சிலரை தேடி வருகிறார்கள். இது தனக்கு தெரியாமலேயே நடந்துவிட்டதாக சிரஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளார்.