Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திருட்டு விசிடியை ஒழிக்க முதல்வர் உதவ வேண்டும்-நடிகர்கள் கோரிக்கை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று கனிமொழி சினிமாப் பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர்கள் விஜய்யும், பார்த்திபனும், திருட்டு விசிடி ஒழிப்பு குறித்துப் பேசினர்.
இதுகுறித்து நடிகர் விஜய் பேசுகையில், கலைஞர் திரைப்பட துறைக்கு பல சலுகைகளை வழங்கியிருக்கிறார். திருட்டு வி.சி.டி.க்கு எதிராக தமிழக அரசு எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தும், அது முற்றிலுமாக ஒழியவில்லை. முன்பு பட அதிபர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து படம் எடுத்தார்கள். இப்போது கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறார்கள்.
அவர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். கலைஞர் டாக்டராக இருந்து நல்ல மருந்து கண்டுபிடித்து, திருட்டு வி.சி.டி. என்ற நோயை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்றார்.
அதேபோல பார்த்திபன் பேசுகையில், திருட்டு வி.சி.டி.யில் கொண்டுவந்து, அந்த படத்தை ஓடவிடாமல் செய்துவிடுகிறார்கள். திருட்டு வி.சி.டி.க்கு எதிராக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் வி.சி.டி. திருடர்கள் ஓயவில்லை. அவர்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றார்.