செங்கடல்: கட் இல்லாமல் அப்படியே அனுமதித்த ட்ரிப்யூனல்!

இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு வரும் அகதிகளின் நிலை, இங்குள்ள மீனவர்களை இலங்கை ராணுவம் படுத்தும் பாடு, இலங்கையில் தமிழ் போராளிக் குழுக்களின் அரசியல் போன்றவற்றை மையப்படுத்தி லீனா மணிமேகலை உருவாக்கிய படம் செங்கடல்.
இந்தப் படத்துக்கு சென்னை சென்சார் அனுமதி மறுத்துவிட்டது. இலங்கையை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதால் அனுமதி தர முடியாது எனக் கூறிவிட்டதால், படத்தை மத்திய தீர்ப்பாயத்துக்கு கொண்டுபோனார் லீனா.
அங்கே படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், ஒரு கட் கூட கொடுக்காமல் திரையிட அனுமதி கொடுத்துள்ளனர்.
விரைவில் இந்தப் படம் திரைக்கு வர உள்ளது.
Comments


Click it and Unblock the Notifications