Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
2 குழந்தைகள் பலி வழக்கு: நடிகர் திலகன் ஜாமீனில் விடுதலை!
நிலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் காரில் சென்றார் திலகன். அப்போது முன்னே சென்ற ஆட்டோ மீது கார் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் பெரோஸ்கான் மகன் பர்வீன்கான், மகள் பாத்திமாஆகியோர் இறந்தனர்.
விபத்தில் திலகனும் காயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் திலகன் நேற்று போலீசாரிடம் சரணடைந்தார். அவரைக் கதைு செய்த போலீசார் உடனடியாக விடுதலை செய்துவிட்டனர்.
"இந்த விபத்து எப்படி நடந்ததென்று திலகனால் கூற முடியவில்லை. மேலும் அவரது வாகனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. திலகனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளோம்", என்றார் மலப்புரம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.
விபத்தில் ஏற்பட்ட காயம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உதவியாளர் சவீதாவும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விபத்தில் இரு குழந்தைகளைப் பறிகொடுத்ததோடு, படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவர் மனைவி இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.