சத்ருகன் சின்காவுக்கு கைது வாரண்ட்

பிரபல இந்தி நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, மேற்கு சாம்பரன் மாவட்டம் பேல்வா பகுரி கிராமத்தில், அனுமதியின்றி அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது உண்மைதான் என்று தெரிய வந்தது. இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சத்ருகன் சின்காவை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











