Don't Miss!
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சாய்பாபா மறைவால் சோகத்தில் மூழ்கிய பாலிவுட்: டுவிட்டரில் இரங்கல் செய்தி
சத்ய சாய்பாபா உடல் நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினர்.
சாய்பாபா பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர்கள் மாதவனும், ராணா டக்குபட்டியும் தங்களது டுவிட்டரில் கூறியுள்ளனர்.
பாபா தனது பூவுடலை துறந்துவிட்டார் என்று தற்போதுதான் கேள்விப்பட்டேன். அவரது பக்தர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று இயக்குனர் ராம் கேபால் வர்மா கூறியுள்ளார்.
அவர் போதனைகள் வாழட்டும். என்றும் நமக்கெல்லாம் வழிகாட்டட்டும் என்று டிசைனர் வர்ஜா பஜாஜ் தெரிவித்துள்ளார்.
டிசைனர் சோனால் சவான் கூறுகையில், "நான் சாய்பாபாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று விரதம் இருக்கிறேன். நான் சாய்பாபாவின் தீவிர பக்தை. அவர் இறந்துவிட்டார் என்றே என்னால் நம்பமுடியவில்லை. இன்று உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சினின் பிறந்தநாள். ஆனால் இதே நாளில் உலகின் சிறந்த மனிதரான சாய்பாபா மறைந்துவிட்டார். அவரது மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தேன்", என்றார்.
நடிகர் விவேக் ஓபராய் டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
"சத்ய சாய்பாபா இன்று காலை தனது மனித உடலைவிட்டுச் சென்றுவிட்டார். உடல் என்பது வெறும் வாகனம்தான். அவரது ஆத்மா தொடர்ந்து நமக்கு வழிகாட்டும்", என்று கூறியுள்ளார்.
சாய்பாபாவின் உடல் புட்டபர்த்தியில் உள்ள அவரது ஆசிரமமான பிரஷாந்தி நிலையத்தில் மக்கள் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைக்கப்படுகிறது.