Don't Miss!
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
கேபிளில் 'கடவுள்' - உரிமையாளருக்கு காப்பு!
இயக்குனர் பாலா இயக்கிய நடிகர் ஆர்யா நடித்த படம் நான் கடவுள். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கோவில்பட்டி ராமசாமி தியேட்டரில் நான் கடவுள் படம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர் ராதாகிருஷ்ணனுக்கு கோவில்பட்டி ஜோதி கேபிளில் இருந்து ராஜீவ் நகர் பகுதியில் நான் கடவுள் படம் ஒளிபரப்பப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ரஜீவ் நகர் பகுதிக்கு சென்று சோதனையிட்டார். அப்போது நான் கடவுள் படம் கேபிள் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது.
உடனடியாக அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் நான் கடவுள் படம் ஒளிபரப்பப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கேபி்ள் டிவி உரிமையாளர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கேபிள் அலுவலகத்தில் இருந்து நான் கடவுள் படத்தி்ன் சிடி, கலர் டிவி, டிவிடி பிளேயர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.