Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பார்' கேட்கும் தியேட்டர் ஓனர்கள்!
குசேலன் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் நேற்று தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. அப்போது முக்கிய தீர்மானங்கள் அங்கு நிறைவேற்றப்பட்டன.
அதில் முக்கிய தீர்மானமாக தியேட்டர் வளாகங்களில் பார் வைக்க அனுமதி தர வேண்டும் என்பது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறுகையில், திரையரங்குகளில் வருமானத்தைப் பெருக்கும் பல்வேறு வழிகளைப் பற்றி ஆலோசித்து வருகிறோம். அதில் ஒன்று அரங்குகளில் பார் திறப்பது.
வெளிநாடுகளில் இதுபோல பார் வசதி கொண்ட திரையரங்குகள் உள்ளன. இதனால் பெண்கள் வருவது பாதிக்கப்படுவதில்லை. எனவே இதேபோல தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் பார்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதுதொடர்பான தீர்மானத்தை தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இருப்பினும் தியேட்டர் உரிமையாளர்களின் இந்தக் கோரிக்கை திரையுலகில் இரு வித கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.