Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சினிமா பத்திரிக்கையாளருக்கு ஜெ. உதவி!
பிரபல சினிமா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் ராமமூர்த்திக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரூ. 3 லட்சம் தந்து உதவியுள்ளார்.
பழம் பெறும் சினிமா பத்திரிகையாளரான இவர். நடிகர் நடிகைகளின் பிறந்த நாள், விருது பெற்ற நாள், வில்லங்கமான நாள் எதுவாக இருந்தாலும் பத்திரிகையின் பெயரில் ஒரு பொக்கே- சால்வையோடு ஆஜராகிவிடுவார்.
சில ஆண்டுகளுக்கு முன் இவர் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து பாரதிராஜா- செல்வமணி- கோவைத்தம்பி ஆகியோர் ஆரம்பித்து உருப்படாமல் போன தமிழ்த் திரை தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளராக கொஞ்ச நாள் இருந்தார். இன்னும் கூட கொஞ்ச நாள் இருந்திருப்பார் அந்தப் பொறுப்பில். ஆனால் அவரது நேரம், முதல் மாத சம்பளம் கொடுத்ததோடு சரியாம். தொடர்ந்து பல மாதங்கள் சம்பளம் தரப்படாததால், பணியை நிறுத்திக் கொண்டார்.
இந்தச் சூழலில் தான் பணியாற்றிய சினிமா பத்திரிக்கையில் ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகள், நிதிப் பலன்கள் எதையும் தரவில்லை என்று ஜெயலலிதாவிடம் போய் புகார் செய்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அவர் மீது எப்போது தனி அபிமானம் உண்டு. ஜெயலலிதா முன்னணி நடிகையாக இருந்த காலத்திலிருந்தே இவருக்கு நன்கு பழக்கம். முன்பு ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடந்தபோது கூட, இவர் போய் பொக்கே கொடுத்துவிட்டு, அனைத்துப் பத்திரிகையாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்டதாக 'அம்மா'விடம் பில்ட் அப் கொடுத்தார். ஜெயலலிதாவிடம் கலைமாமணி விருதும் வாங்கியுள்ளார்.
ராமமூர்த்தியின் கதையைக் கேட்ட ஜெயலலிதா, தான் இதில் செய்ய ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
வேண்டுமானால் என்னால் ஆன உதவி என்று கூறி தனிப்பட்ட முறையில் ரூ. 3 லட்சத்தை அன்பளிப்பாகத் தந்து தனது நன்றிக் கடனைத் தீர்த்து அனுப்பி வைத்தாராம்.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!