Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அவன் இவன்: சில வசனங்களை நீக்குமாறு பாலாவிடம் கேட்டுக்கொண்ட போலீஸ்!
பாலாவின் அவன் இவன் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளில் இடம்பெற்றுள்ள ஆட்சேபணைக்குரிய சில காட்சிகளை நீக்குமாறு படக்குழுவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார் கோவை மாநகர கமிஷனர் அம்ரேஷ் பூஜாரி.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் குறிப்பிட்ட சமூக மக்களின் இஷ்டதெய்வமான சொரிமுத்து அய்யனாரை கேலி செய்வதாகவும் சில காட்சிகளில் ஜமீனைக் கேலி செய்வதாகவும் கூறி சில அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றும் இதுகுறித்து மாநகர கமிஷனர் அம்ரேஷ் பூஜாரியை சந்தித்து, பாலா, விஷால், ஆர்யா மீது வழக்கு பதிவு செய்யவுமாறு புகார் கொடுத்தனர்.
இதையடுத்து இரு போலீசாரை நேற்று இரவு தியேட்டருக்கு அனுப்பி அவன்-இவன் படத்தை பார்க்கச் செய்த கமிஷனர், சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கும்படி படக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனை கமிஷனரும் நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார். போலீசாரின் வேண்டுகோளுக்கு பாலாவின் பதில் என்ன என்பது நாளை தெரிந்துவிடும்.