தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போனது சைப், கரீனா திருமணம்
மன்சூர் அலி கான் பட்டோடி மறைவையடுத்து சைப் அலி கான், கரீனா கபூர் திருமணம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சைப் அலி கானும், கரீனா கபூரும் நெடுங்காலமாக காதலித்து வருகின்றனர். இந்தா, அந்தா என்று ஒரு வகையாக 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடுவெடுத்தனர். இந்நிலையில் சைப் அலி கானின் தந்தை மன்சூர் அலி கான் பட்டோடி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
இன்னும் ஒரு ஆண்டிற்கு சைப் வீட்டில் எந்த கொண்டாட்டங்களும் இல்லை. இதையடுத்து சைப், கரீனா திருமணம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தந்தை குணமாகி வந்துவிடுவார், படோடியில் உள்ள பாரம்பரிய அரண்மனையில் வைத்து கரீனாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று சைப் நினைத்திருந்தார். ஆனால் விதி வேறு விதமாக நடந்துவி்ட்டது.
Comments


Click it and Unblock the Notifications