Don't Miss!
- News 4ம் கட்ட லோக்சபா தேர்தல்! 10 மாநிலங்கள்.. 96 தொகுதிகளில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
24: அடர்ந்த தாடி, கலைந்த முடியுடன் போஸ்டரில் 'மிரட்டும்' சூர்யா!
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர்களை நடிகர் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.
சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் 24. 'யாவரும் நலம்' விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சமந்தா, நித்யாமேனன் இருவரும் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.
ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.
#24TheMovie @2D_ENTPVTLTD @StudioGreen2 @deepakbhojraj @arrahman #vikramkumar Found both interesting!Hope you like!! pic.twitter.com/2V7QKT7upV
— Suriya Sivakumar (@Suriya_offl) January 23, 2016
இந்த போஸ்டரில் கோட்சூட் அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அடர்ந்த தாடி, கலைந்த தலைமுடி மற்றும் அதிகபட்ச மிரட்டல் பார்வையுடன் சூர்யா காணப்படுகிறார்.
இந்த போஸ்டரை பார்க்கும் போது திகிலூட்டும் விதமாக இருக்கிறது. இப்படத்தில் சூர்யா நடித்திருக்கும் 3 விதமான கெட்டப்களில் இதுவும் ஒன்று என்று கூறுகின்றனர்.
டைம் மெஷின் சம்பந்தப்பட்ட கதை என்பதும் சூர்யா தனது அதிகப்படியான உழைப்பைக் கொட்டியிருப்பதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படம் தேர்தல் காரணமாக முன்கூட்டியே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.