Don't Miss!
- News வைகோவுக்கு தோள் கொடுத்த கணேசமூர்த்தி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இரங்கல்!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Automobiles 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பூசணிக்காய் உடைப்பதற்கு பதில்.... ரத்ததானம் செய்த '180' படக்குழு !
'180'... படத்தின் தலைப்பைப் போலவே இந்த படக் குழுவினரின் செயலும் வித்தியாசமாக அமைந்துள்ளது.
பொதுவாக ஒரு படம் முடிந்ததும், அந்த யூனிட் ஆட்கள் பூசணிக்காய் உடைப்பது தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.
ஆனால் '180' படக்குழுவினர் பூசணிக்காய் உடைக்கவில்லை. அதற்கு பதில், படத்தின் வெளியீட்டு தினமான இன்று, படக் குழுவினர் ரத்த தானம் செய்தனர்.
சத்யம் சினிமாஸ் - அகல் பிலிம்ஸ் தயாரித்து, ஜெயேந்திரா இயக்கியுள்ள படம் நூற்றெண்பது. இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.
இதையொட்டி, 'நூற்றெண்பது' படக்குழுவினர் நேற்று ரத்த தானம் செய்தனர். இயக்குநர் ஜெயேந்திராவும், படத்தின் ஹீரோயின் ப்ரியா ஆனந்தும் ரத்ததானம் செய்தார்.
படத்தின் எழுத்தாளர்கள் சுபா, நடிகர் ஸ்ரீசரண், நடிகை ஜானகி சபேஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
சென்னை ரோட்டரி, டிடிகே ரத்த வங்கியுடன் இணைந்து, 180 படக்குழுவினர் சத்யம் தியேட்டர் வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.