Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அனுஷ்கா, நாகார்ஜுனா வீடுகள் பிடிபட்ட ரூ 40 கோடி சொத்துகள்!
தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜுனா, ரவிதேஜா, அனுஷ்கா மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் ரூ 40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ரொக்கம் பிடிபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, நடிகை அனுஷ்கா வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிவபிரசாத்ரெட்டி, வெங்கட் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
விசாகப்பட்டினத்தில் இவர்கள் சொந்தமாக வீடுகள் வாங்கி இருப்பதாகவும் அதற்கு வருமான கணக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை ஏற்பட்டது. இதில் ஏராளமான சொத்து பத்திரங்கள், ஆவணங்கள், ரொக்கப் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன. அவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.
அப்போது இந்த சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டது பற்றி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் ரூ.40 கோடிக்கு புதிதாக சொத்துக்கள் வாங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி அனுஷ்காவுக்கும் நாகார்ஜுனாவுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் இது போல் அனுப்பப்பட்டுள்ளது.