Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தனது வாரிசை நடிகராக்காதவர் ஜெய்சங்கர்! - கமிஷனர் ராஜேந்திரன்
வாழ்ந்த வரை பலருக்கும் உதவிகள் செய்து நல்ல மனிதர் என்று பெயரெடுத்தவர் மறைந்த நடிகர் ஜெய்சங்கர். அவரது மகன் விஜய்சங்கர் பிரபலமான கண் மருத்துவ நிபுணர். சென்னையில் பல இலவச கண் மருத்துவ முகாம்களை நடத்தியவர். இப்போது தந்தை ஜெய்சங்கர் பெயரில் ஒரு இணையதளத்தைத் துவங்கியுள்ளார்.
'ஜெய்சங்கர்.இன்' (www.jaishankar.in) என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், நடிகர் கார்த்தி ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள விஜய்சங்கரின் மருத்துவமனையில் இந்த விழா நடந்தது.
இந்த விழாவில் பேசிய ஆணையர் ராஜேந்திரன், "தனது வாரிசையும் நடிகனாக்க முயற்சிக்காத அரிய கலைஞர் ஜெய்சங்கர். எத்தனையோ பேருக்கு வெளியில் தெரியாமல் உதவியவர். டாக்டர் விஜய்சங்கரும் நடிப்புத் துறைக்குப் போகாமல் அப்பாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த இணையதளம் அவரது சமூகப் பணிகளுக்கு உதவியாக இருக்கும்" என்றார்.
நடிகர் கார்த்தியும் பேசினார். டாக்டர் விஜய்சங்கர் நன்றி கூறினார்.