Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிக்கலில் எம்.ஜி.ஆர் படங்கள்!
இந்த படங்களுக்கு உரிமை கோரி எம்.ஜி.ஆர். பிக்சர்ஸும், கவிதா பிலிம்ஸும் வழக்கு தொடர்ந்தன. பத்து ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த இந்த வழக்கில், அந்தப் படங்கள் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸுக்குதான் சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம், படங்களை திரையிட ஓ.கே பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தது.
சமீபத்தில் இந்தப் படங்கள் தமிழகமெங்கும் தியேட்டர்களில் வெளியானது. தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. இந்த நிலையில் ஒப்பந்தப்படி ஓ.கே பிலிம்ஸ் பணம் தரவில்லை. அதனால் படத்தை அவர் திரையிடவோ தொலைக்காட்சிக்கு கொடுக்கவோ தடை விதிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் நிர்மலா ரவீந்திரன் உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெய்பால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் வழக்கறிஞர் ரமேசும், தனியார் தொலைக்காட்சி சார்பில் வழக்கறிஞர் ஹரிசங்கர் கிருஷ்ணசாமியும் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ஓ.கே.பிலிம்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந் நிலையில் கவிதா பிலிம்ஸ் உரிமையாளர் ராஜமாணிக்கம் எம்.ஜி.ஆர் படங்கள் மீது மறுசீரமைப்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் எம்.ஜி.ஆரின் இந்த மூன்று புகழ்பெற்ற படங்களை திரையிடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.