Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தொப்பி கொடுக்கச் சென்ற அன்னா ஆதரவாளர்களை தாக்கிய சல்மான் பாடிகார்ட்ஸ்
நடிகர் சல்மான் கான் கான்பூரில் உள்ள ககதியோவில் நடந்த விழா ஒன்றில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னாவுடன் சேருமாறு சல்மானை அழைக்க அன்னா ஆதரவாளர்கள் அங்கு வந்தனர்.
அன்னாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பிக் கொண்டு, கைகளில் கொடியுடன் வந்தவர்கள் சல்மான் காரை நோக்கிச் சென்றனர். உடனே சல்மானின் மெய்க்காப்பாளர்கள் அன்னா ஆதரவாளர்கள் மீது பாய்ந்து விட்டனர். அவர்கள் தாக்கியதில் ஜன் ராஜ்ய கட்சியின் பொதுச் செயலாளர் ஓமேந்திரா பாரத் அதே இடத்தில் மயக்கம்போட்டு விழுந்தார்.
இது குறித்து ஜன் ராஜ்ய கட்சித் தலைவர் தீபக் பாரத் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு கூறுகையில்,
சல்மானின் கார் அருகே சென்றவுடன் அவரது மெய்க்காப்பாளர்கள் எங்களை தாக்கத் துவங்கிவிட்டனர். அவருக்கு அன்னா தொப்பியும், ஊழலுக்கு எதிரான வாசனங்கள் அடங்கிய பேப்பரில் ஆட்டோகிராப் வாங்கவும் தான் சென்றோம். வேறு எந்த தூண்டுதலின்பேரிலும் நாங்கள் செல்லவில்லை என்றார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு சிலர் சல்மானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அன்னா தொப்பியை பரிசளிக்க சென்ற ஆதராவளர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சல்மான் மீதும், அவரது மெய்க்காப்பாளர்கள் மீது ஓமேந்திரா போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். இது உண்மை என்று தெரிய வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம் என்று இன்ஸ்பெக்டர் உபேந்திரா சிங் ரத்தி தெரிவித்தார்.
விழாவில் இருந்து வெளியே வந்த சல்மானைப் பார்ப்பதற்காக மக்கள் முந்தியடித்துக் கொண்டு வந்தனர் என்று அன்னா ஆதரவாளரான உபன்ஷு ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.