Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தொப்பி கொடுக்கச் சென்ற அன்னா ஆதரவாளர்களை தாக்கிய சல்மான் பாடிகார்ட்ஸ்
நடிகர் சல்மான் கான் கான்பூரில் உள்ள ககதியோவில் நடந்த விழா ஒன்றில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னாவுடன் சேருமாறு சல்மானை அழைக்க அன்னா ஆதரவாளர்கள் அங்கு வந்தனர்.
அன்னாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பிக் கொண்டு, கைகளில் கொடியுடன் வந்தவர்கள் சல்மான் காரை நோக்கிச் சென்றனர். உடனே சல்மானின் மெய்க்காப்பாளர்கள் அன்னா ஆதரவாளர்கள் மீது பாய்ந்து விட்டனர். அவர்கள் தாக்கியதில் ஜன் ராஜ்ய கட்சியின் பொதுச் செயலாளர் ஓமேந்திரா பாரத் அதே இடத்தில் மயக்கம்போட்டு விழுந்தார்.
இது குறித்து ஜன் ராஜ்ய கட்சித் தலைவர் தீபக் பாரத் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு கூறுகையில்,
சல்மானின் கார் அருகே சென்றவுடன் அவரது மெய்க்காப்பாளர்கள் எங்களை தாக்கத் துவங்கிவிட்டனர். அவருக்கு அன்னா தொப்பியும், ஊழலுக்கு எதிரான வாசனங்கள் அடங்கிய பேப்பரில் ஆட்டோகிராப் வாங்கவும் தான் சென்றோம். வேறு எந்த தூண்டுதலின்பேரிலும் நாங்கள் செல்லவில்லை என்றார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு சிலர் சல்மானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அன்னா தொப்பியை பரிசளிக்க சென்ற ஆதராவளர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சல்மான் மீதும், அவரது மெய்க்காப்பாளர்கள் மீது ஓமேந்திரா போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். இது உண்மை என்று தெரிய வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம் என்று இன்ஸ்பெக்டர் உபேந்திரா சிங் ரத்தி தெரிவித்தார்.
விழாவில் இருந்து வெளியே வந்த சல்மானைப் பார்ப்பதற்காக மக்கள் முந்தியடித்துக் கொண்டு வந்தனர் என்று அன்னா ஆதரவாளரான உபன்ஷு ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.