Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
வனிதா என் மகள் என்று சொல்லவே வேதனையாக இருக்கிறது-விஜயக்குமார் ஆவேசம்
நடிகர் விஜயக்குமார், அவரது மகனும் நடிகருமான அருண் விஜய், சகோதரிகள் ஸ்ரீதேவி, ப்ரீதா, ப்ரீதாவின் கணவரான இயக்குநர் ஹரி ஆகியோர் மீது சரமாரியான புகார்களை சுமத்தியுள்ளார் முன்னாள் நடிகையும், விஜயக்குமாரின் மகளுமான வனிதா.
மேலும் விஜயக்குமார் வீட்டில் அசிங்கமான, சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. அதையெல்லாம் சொன்னால் நாறிப் போய் விடும். அவற்றையெல்லாம் நான் வாராவாரம் சொல்வேன் என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
தன்னை விஜயக்குமாரும்,அருண் விஜய்யும் அடித்து உதைத்ததாக டிஜிபியிடமும் நேரில் புகார் கொடுத்துள்ளார். மதுரவாயல் போலீஸார் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.
மகள் வனிதாவின் இந்த அதிரடி ஆவேச புகார்கள் குறித்து விஜயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
வனிதா என் பெயரை கெடுக்கிறார். பிள்ளைகளை பெத்து வளர்த்து ஆளாக்குவது பெற்ற தாய், தந்தையர் பெயரையும் குடும்பத்தின் பெயரையும் காப்பாற்றுவதற்குத்தான். அந்த பெயரை கெடுப்பதற்காக அல்ல. நடந்ததை மறைத்து நடக்காத ஒன்றை நடந்ததை போல் செய்தி வெளியிட்டு என்னையும், என் மகன் அருண்விஜய்யையும் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் என்மேல் அன்பு கொண்ட அனைவரின் மனதையும் புண்படுத்தி இருக்கிறார் வனிதா.
வனிதா என் மகள் என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு வேதனையிலும், வெட்கத்திலும் இருக்கிறேன். இதுக்கு மேல் என் குடும்பத்துக்கும், வனிதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இனியும் இதுபோல தவறான செய்தியை வனிதா வெளியிட்டாலோ, தன்னோட சுயலாபத்துக்காக என் பெயரை பயன்படுத்தினாலோ அவர் மேல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
நாம் பிள்ளைகளை பெற்று வளர்த்தவர்கள். தம்மைப் போல அவங்களும் பிள்ளைகளை பெத்து வளர்த்து ஆளாக்கும் போதுதான் அந்த வலியை உணர்வார்கள். இதற்குமேல் என் பெற்ற மனமும் பெருகும் கண்ணீரும் வார்த்தைகளை சொல்ல இடம் கொடுக்க வில்லை என்றார் அவர்.