'நிஜ வில்லன் பிரகாஷ் ராஜ்!!' - மகளிர் அமைப்புகள் காட்டம்

By Chakra

Prakash Raj
நல்ல குடும்பத்தைக் கெடுத்து கள்ளக் காதலுக்கு ஆதரவளிக்கும் நிஜ வில்லன் பிரகாஷ் ராஜின் படங்களை தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும், என்று மகளிர் அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன.

மனைவி, குழந்தைகளை கைவிட்டு, கள்ளக் காதலி நயன்தாராவுடன் குடித்தனம் நடத்த ஆரம்பித்துவிட்டார் பிரபு தேவா. இதற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார் வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ். இதனை மகளிர் அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.

இதுகுறித்து பாரத மாதா பெண்கள் அமைப்பின் தலைவி பாரதி குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரபுதேவா தனது மனைவி ரம்லத்தை உதறிவிட்டு நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக அறிந்ததும் பெண்கள் நாங்கள் வேதனை அடைந்தோம்.

நயன்தாரா- பிரபுதேவாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. நயன்தாரா உருவ படங்களை எரித்தும் பெண்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஆனாலும் இருவரும் திருந்தவில்லை.

ரசிகர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்களே இப்படி ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடுவது நல்லதல்ல. தமிழ் மண்ணில் தவறான கலாசாரத்தை விதைக்கும் இவர்களது படங்களை பெண்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்போம்.

தமிழக பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரம்லத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் இந்த வேளையில் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீரென இந்த விவகாரத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவிக்கிறார்.

இவர் ஏதோ பொது வாழ்க்கையில் ஒழுக்கமானவர் என்பது போலவும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்து விளங்கி இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது போலவும் பிதற்றிக் கொள்கிறார். பிரபு தேவா குடும்பத்தைக் கெடுத்ததே இந்த பிரகாஷ்ராஜ்தான்.

பிரபு தேவாவையே நம்பி அவர் மனைவி ரம்லத்தும், குழந்தைகளும் இருக்கும்போது, "நயன்தாரா - பிரபுதேவா பொருத்தமான நல்லஜோடி. அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்," என்று பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்துள்ளது வெட்கக் கேடானது. இது பெண்கள் மனதில் மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

பிரகாஷ்ராஜ் ஏற்கனவே நல்லபடியாக குடும்பம் நடத்திய தனது மனைவியை உதறிவிட்டு இன்னொரு நடன பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதே வழியில் பிரபுதேவா செல்வதால் ஆதரவை தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நல்ல கலாசாரம் இருப்பதால் உலக அளவில் தமிழர்கள் உயர்ந்த நிலையை அடைந்து வருகிறார்கள். இந்த கலாசாரத்திற்கு வேட்டு வைக்கும் நிஜ வில்லன் பிரகாஷ்ராஜை தமிழக பெண்கள் சும்மா விடமாட்டார்கள். அவர் நடித்த படங்களை பெண்கள் அனைவரும் புறக்கணிப்போம். அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அங்கு கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம்.

பிரகாஷ்ராஜ் சினிமாவில்தான் வில்லன் என்றால் நிஜவாழ்விலும் வில்லத்தனத்தை காட்டிவிட்டார். அப்பாவிப்பெண் ரம்லத்திற்கு எதிராக செயல்படும் பிரகாஷ்ராஜ் நாவை அடக்கிக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடக்குவோம்..." என்று கூறியுள்ளார்.

இந்து மக்கள் கட்சி கண்டனம்:

பிரகாஷ் ராஜைக் கண்டித்து, இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் தா.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ரம்லத் தனது கணவரை மீட்க கோர்ட்டு படியேறி போராடுகிறார். இந்த நிலையில் பிரபுதேவா, நயன்தாராவை சிறந்த ஜோடி என்று பிரகாஷ்ராஜ் பாராட்டுவதும் அவர்கள் காதலை ஆதரிப்பதாக சொல்வதும் கண்டிக்கத்தக்கது. பிரபுதேவா- நயன்தாரா இடையே இருப்பது தகாத உறவு அதை ஆதரிப்பது குற்றம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாசாரம் அதன் மீது திட்டமிட்டு பிரகாஷ்ராஜ் தாக்குதல் தொடுக்கிறார். ரம்லத்துக்கு அவர் வில்லனாகிவிட்டார். இது போன்ற தவறுகள் செய்ய ஆண்களை தூண்டுகிறார். இப்படிப்பட்டவர் பிரபலமாக இருக்க தகுதியில்லாதவர், அவர் படங்களைப் புறக்கணிக்க வேண்டும்..." என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X