Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தேர்தல் நடைபெறும் நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன்?-'குத்து' ரம்யாவுக்கு நோட்டீஸ்!
குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கிருஷ்ணா, வெளியுறவு அமைச்சராக இருக்கிறார். இவரது வழியில் இப்போது குத்து ரம்யாவும் அரசியலில் குதித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸில் இணைந்த அவர் சாந்திநகர் பூத் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்வு பெற்றார். தற்போது மாநிலத் தலைவர் பதவிக்குக் குறி வைத்துள்ளார்.
இதற்காக ஆதரவு திரட்டும் வகையில் பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுத்து அங்கு புயலைக் கிளப்பியுள்ளார். ரம்யாவின் இந்த பேட்டி அரசியல், மாநில காங்கிரஸாரை, குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குறி வைத்திருப்போரை எரிச்சலுக்குள்ளாக்கியஉள்ளது. இதையடுத்து ரம்யாவைத் தட்டி வைக்குமாறு அவர்கள் தேர்தல் அதிகாரிக்கு புகார்களை அனுப்பினர்.
இதையடுத்து தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பேட்டி கொடுப்பது ஏன் என்று விளக்கம் கேட்டு குத்து ரம்யாவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.