Don't Miss!
- News மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை.. ஐசியூவில் திடீர் அட்மிட்.. தற்போது எப்படி இருக்கிறார் மன்சூர்?
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கனகா வழக்கில் ஆவி அமுதாவுக்கு முன்ஜாமீன்!
ஆவி அமுதா அடியாட்களை வைத்து தொலைப்பேசிய மூலம் தன்னை மிரட்டுவதாக கடந்த 9ஆம் தேதி சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் கனகா புகார் கொடுத்தார்.
இதன்பேரில், அமுதா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். இந்த விசாரணையில் கண்டுள்ள உண்மைகளின்அடிப்படையில், ஆவி அமுதா கைதாகும் நிலை ஏற்பட்டது.
உடனே முன் அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கனகாவுக்கு எதிராக ஏற்கனவே அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதால், வேண்டுமென்றே அவர் பொய் புகார் கூறியுள்ளதாக ஆவி அமுதா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தேவைப்படும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்று ஆவி அமுதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கினார். மேலும் 3 ஆயிரம் ரூபாய்க்கு இருநபர் ஜாமீன் அளிக்கவும் உத்தரவிட்டார்.
இதனிடையே ஆவி அமுதா தொடர்ந்த அவதூறு வழக்கு குறித்து கனகா வரும் மே மாதம் 7ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.