twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வனிதா விஜயக்குமார் முன்ஜாமீன் மனு-விளக்கமளிக்க போலீஸுக்கு உத்தரவு

    By Sudha
    |

    Vanitha Vijayakumar
    சென்னை: நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளது.

    தந்தை நடிகர் விஜயக்குமார், தம்பி அருண் விஜய் உள்ளிட்டோர் மீது சரமாரியாக புகார்கள் கூறியுள்ளார் வனிதா. மேலும் அவர்கள் மீது மதுரவாயல் காவல் நிலையத்திலும், டிஜிபியிடமும் புகார் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு இன்று நீதிபதி அக்பர் அலி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X