Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சோனா ஆர்ப்பாட்ட அறிவிப்பு எதிரொலி: எஸ்பி பாலசுப்பிரமணியன் வீட்டுமுன் போலீஸ் குவிப்பு
மங்காத்தா மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோனா வற்புறுத்தி வருகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தயங்கி வருகிறார். ஆனால் தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலம் சமரச பேச்சு நடத்தி வருகிறார்.
இவருக்காக அவரது அப்பா எஸ்பி பாலசுப்ரமணியமே சோனாவிடம் தூது போனதும் நடந்தது.
சரண் மன்னிப்பு கேட்காததால், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததற்கான வீடியோ ஆதாரங்களை போலீசாரிடம் சோனா ஒப்படைத்துள்ளார்.
இதற்கிடையில் சோனாவுக்கு ஆதரவாக பெண்கள் சங்கத்தினர் போராட்டத்தில் குதிக்கின்றனர். எஸ்.பி.பி. சரண் வீட்டில் இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மகளிர் அமைப்புகள் அறிவித்தன.
எஸ்.பி.பி. சரண் வீடு மகாலிங்கபுரத்தில் உள்ளது. அங்கு பெண்கள் அத்து மீறி நுழைந்து தகராறில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து சரண் வீட்டின் முன்னால் இன்று காலை போலீசார் குவிக்கப்பட்டனர்.
பெண்கள் அமைப்பினர் முற்றுகை போராட்டத்துக்கு போலீசாரிடம் அனுமதி பெறவில்லை. அனுமதிக்கு இப்போதுதான் மனு கொடுத்துள்ளதாகவும், போராட்டத்தை இரண்டொரு நாட்களுக்கு தள்ளி வைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளர். இந்தப் போராட்டம் பெண்களை கேவலமாக நினைப்பவர்களுக்கு ஒரு சரியான பாடமாக இருக்கும் வகையில் நடத்தப்படும் என்று பெண்கள் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.