Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நாடு முழுக்க ஹஸாரே கதிர்வீச்சு! - விவேக் பேச்சு
பன்னாட்டு அரிமா சங்கம், சென்னை அரிமா மாவட்டம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக்கான ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மரம் நடுவிழாவை தொடங்கி வைத்து விவேக் பேசுகையில், "பசுமை கலாம் திட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளேன். இந்த திட்டத்திற்கு அரிமா மணிலால் ஒரு லட்சம் மரக்கன்றுகள் தருவதாக கூறினார்.
இன்று நாடு முழுவதும் ஒரு கதிர்வீச்சு பரவுகிறது. அது அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு தான்.
அன்னா ஹசாரே ஊழலை ஓழிக்க பாடுபடுகிறார். இங்கு உள்ள மாணவ தம்பிகளை தம்பி ஹசாரேவாக பார்க்கிறேன். இந்தியாவில் 100 கோடி மரங்களை நடவேண்டும் என்று அப்துல்கலாம் விரும்புகிறார்.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை பசுமை கலாம் திட்டத்தில் நட உள்ளோம். இதில் எக்ஸ்னோரா உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகள் சேர்ந்துள்ளன.
மரம் வளர்க்கும் விழிப்புணர்வை மாணவர்கள் கிராமத்து மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். விவசாயம் வளர மழைநீர் தேவை. அதற்கு மரங்கள் தேவை. மரத்தை வளர்த்து வளத்தை பெருக்குவீர்," என்றார்.
பன்னாட்டு அரிமா இயக்குனர் கிருஷ்ணாரெட்டி, போலீஸ் ஐ.ஜி.ஆறுமுகம், அரிமா மாவட்ட கவர்னர் பி.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் வரவேற்றார். அரிமா டி.சேகர் நன்றி கூறினார்.