Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தயாரிப்பாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு- ஐஏஎஸ் அதிகாரிக்கு பிடிவாரண்ட்
காற்றுக்கென்ன வேலி படத் தயாரிப்பாளர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில், நேரில் ஆஜராகுமாறு ஐஏஎஸ் அதிகாரி ராஜுவைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக புகழேந்தி எழும்பூர் கோர்ட்டில் தொடர்ந்த அவதூறு வழக்கில், காற்றுக்கென்ன வேலி என்ற படத்தை கடந்த 2000 ம் ஆண்டு நான் தயாரித்தேன். ஆனால் படத்தை வெளியிட சென்சார் போர்டு சான்றிதழ் தரவில்லை.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக படம் எடுக்கப்பட்டதாக காரணம் தெரிவித்தனர். பின்னர் ஐகோர்ட்டில் வழக்கு போட்டு சமீபத்தில் படத்தை வெளியிட்டேன்.
இந்நிலையில் இந்த படத்துக்கு விடுதலைப்புலிகள் முதலீடு செய்ததாக சென்சார் போர்டின் சென்னையில் உள்ள பிராந்திய தணிக்கை அதிகாரி ராஜூ தெரிவித்துள்ளார். எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் பொய்யான குற்றச்சாட்டை கூறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கு 14 வது கோர்ட்டில் நீதிபதி காஞ்சனா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய பின்னர், பலமுறை சம்மன் அனுப்பியும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜூ ஆஜராகவில்லை என்று கூறிய நீதிபதி, . ராஜுவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.