Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
அமீரிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தமிழ்நாடு திரைப்பட துறையினர் சார்பில் பேரணி நடந்தது. இதை தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் இயக்குனர்கள் அமீர் மற்றும் சீமான் இருவரும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளுக்க ஆதரவாகவும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து ராமநாதபுரம் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் விசாரணை முடியும் வரை வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரது பாஸ்போர்ட்டும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இயக்குனர் அமீர் தனது பாஸ்போர்ட்டை தனக்கு திரும்ப அளிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாஸ்போர்ட்டை திரும்ப பெற்று கொள்ளுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று அமீர் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் ஆஜரானார். நீதிமன்றத்தில் அமீரின் வக்கீல்கள் கருணாகரன் மற்றும் அக்பர் அலி ஆகியோர் வாதாடினர். இதையடுத்து நீதிபதி பாஸ்போர்ட்டை அமீரிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.