Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆந்திர நடிகர்கள் படத்தை பார்க்க கூடாது: தெலுங்கானா தலைவர் தடை
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அவ்வப்போது உச்சகட்டத்துக்குப் போவதும் தணிவதுமாக இழுபறிப் போராட்டமாகிவிட்டது தெலுங்கானா விவகாரம்.
இந்நிலையில், தெலுங்கானா கூட்டமைப்பு தலைவர் கோதண்டராம் ரெட்டி கல்லூரி மாணவர்களிடம் பேசும் போது கூறியதாவது:
தெலுங்கானா மாணவர்கள் சிரஞ்சீவி, அவரது சகோதரர் பவன் கல்யாண், மகன் ராம்சரன் தேஜா, மற்றும் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., நாகார்ஜுனா, வெங்கடேஷ் போன்ற ஆந்திர நடிகர்கள் நடிக்கும் படங்களை பார்க்க கூடாது. மாணவர்கள் ஆதரவு இல்லாவிட்டாலே அவர்கள் ப்யூஸ் போன பல்பாகிவிடுவார்கள். ஒற்றுமை என்ற பெயரில் நமது ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.
இதே போல் ஆந்திர பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க கூடாது. அவர்களது கடைகளில் பொருள் வாங்குவதையும் இதன் மூலம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும். நாம் யார் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்," என்றார்.