Don't Miss!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- News டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மனைவி - குழந்தைக்கு மாதம் ரூ 15000 ஜீவனாம்சம்! - இயக்குநர் பேரரசுக்கு உத்தரவு
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் இயக்குநர் பேரரசு. விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி, விஜயகாந்த்தை வைத்து தர்மபுரி ஆகிய படங்களை இயக்கியவர்.
இவருக்கும், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த சாந்திக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விருத்திகா என்ற பெண்குழந்தையும் உள்ளது.
பேரரசு உதவி இயக்குநராக இருந்தபோது இவர்களது திருமணம் நடந்தது. கல்யாணத்தின்போது சாந்தி வீட்டு சார்பில் வரதட்சணையாக நகை,பணம் கொடுக்கப்பட்டது. இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
பின்னர் பேரரசு இயக்குநராக மாறியதும், கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். சாந்தி தனது தாய் வீட்டுக்குச்சென்று விட்டார்.
2006 ம் ஆண்டு கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி பவானி நீதிமன்றத்தில் சாந்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது அவர் சரியாக ஆஜராகாததால், பேரரசுக்கு சாதகமாக விவாகரத்து வழங்கப்பட்டது.
அதன் பின்னர் 2007ம் ஆண்டு சாந்தி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தான் பழைய முகவரி கொடுத்ததால், வழக்கு விசாரணை தனக்குதெரியாமல் போய்விட்டது. எனவே விவாகரத்து வழங்கியது செல்லாது என அறிவிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கணவரைப் பிரிந்து வாழ்வதால், தானும் மகளும் மிகுந்த சிரமப்படுவதாகவும், மாதந்தோறும் தனக்கு 10 ஆயிரமும், மகளுக்கு 5,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் சாந்தி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த பவானி நீதிமன்றம், இயக்குநர் பேரரசு மனைவி, குழந்தைகளுக்கு மாதம் 15 ஆயிரம் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தது.
பவானி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பேரரசு, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், பவானி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து, ஜீவனாம்சம் தர உத்தரவிட்டார். பேரரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!
-
ஸ்ருதிஹாசன் உடன் பார்ட்டி, பப் என சுற்றும் லோகேஷ் கனகராஜ்.. லீக்கான வீடியோ.. ரசிகர்கள் ஷாக்!