Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இளையராஜா பாராட்டிய 'அய்யன்'!
சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நடித்துள்ள அய்யன் படம் சிறப்பாக வந்துள்ளதாக அதன் இயக்குநர் கேந்திரன் முனியசாமியைப் பாராட்டியுள்ளார் இசைஞானி இளையராஜா.
வர்ஷா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.சேகர் ராஜன் தயாரித்துள்ள படம் 'அய்யன்". மாமதுரை படத்தில் நாயகனாக அறிமுகமான வாசன் இந்தப் படத்தில் 'முனியசாமி' எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக அரியசெல்வி எனும் பாத்திரத்தில் திவ்யா பத்மினி எனும் புதுமுகம் நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது இசைஞானி இளையராஜா முதல் பாடல் சிடியை வெளியிட, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக்கொண்டார்.
படம் பற்றி இளையராஜா கூறுகையில், "இயக்குநர் கதை சொல்றப்போ பிடிச்சிருந்தது. அவருடைய இளவயது வேகம் அதில் தெரிந்தது. இப்போது படத்தை முடித்துவிட்டு வந்து காட்டியதும் அவருடைய திறமையை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் பாடலாசிரியர்களுடன், எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவரையும் பாடல் எழுத வைத்திருக்கிறேன். எனக்கு படம் பிடிச்சிருக்கு. இருந்தாலும் படத்தை மக்கள் பார்த்துதான் அவுங்க கருத்தை சொல்லனும்..." என்றார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் ஏ.ஆர். கேந்திரன் முனியசாமி.
படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது.