Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு சாதகம்
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பொய் சொல்கிறார் காஜல்! - விளக்கத்தை ஏற்க மறுக்கும் தெலுங்கு படவுலகம்
காஜல் அகர்வால் தெலுங்குப் பட வாய்ப்புகளுக்காக பொய் சொல்கிறார், என்று சக நடிகைகள் மற்றும் முன்னணி இயக்குநர்கள் அவர் மீது புகார் கூறியுள்ளனர்.
சிங்கம் படத்தின் இந்திப் பதிப்பில் நடிக்கிறார் காஜல். இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தன்னை எல்லோரும் தென்னிந்திய நடிகை என குறிப்பிடுவது பிடிக்கவில்லை என்றார்.
ஒரே ஒரு இந்திப் படத்தில் நடித்த உடன் வாழ்க்கை தந்த தமிழ் - தெலுங்குப் பட உலகை அவமானப்படுத்துகிறார் காஜல் என அவருக்கு எதிராகக் கிளம்பினர் தென்னிந்தியப் பட உலகினர்.
இந்த நிலையில், நான் அப்படிச் சொல்லவே இல்லை. நான் சொன்னதை தப்பா எழுதிட்டாங்க, என்று சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார் காஜல். தென்னிந்தியப் படங்களில் நடிப்பதில் நான் பெருமை அடைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதனை ஏற்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தயாராக இல்லை.
"காஜல் இப்போது தொடர்ந்து பொய் பேசுகிறார். அவர் பேசியது தவறு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், வட இந்திய நடிகை என்பதை பெருமையாக நினைக்கும் அவருக்கு தமிழ் - தெலுங்கு சினிமாவில் என்ன வேலை?," என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.